Sunday, September 30, 2012

காதல்


ம் என்ற ஒற்றை வார்த்தையில் தொடங்குகின்றது காதலுக்கான பல்லவி

காதலில் என்றுமே முதல் எழுத்து பிழை ...
பிழை திருத்துகின்றாள்..
திருத்தத்தோடு எழுத்து பிழையும் காதலாகிறது ..
அவள்
கண்களும் இதழ்களும் தோழமை கட்சிகள்...
இதழ்கள் தயங்குவதை கண்கள் சொல்லி விடுகின்றன ....
கண்கள் மயங்கும் நேரம் இதழ்கள் பேச தொடங்குகின்றன

பல்லவிமுழுவதும் முத்தங்களால் நிரப்புகின்றேன்வணிக மயமாகி விட்ட வாழ்கையில்.. இந்தகாதலில் மட்டுமே கொடுக்கலும் வாங்கலும் கூட குறைய இருப்பது ஏற்று கொள்ள படுகின்றது

உணரப்படும் தருணமே காதல் வெளிப்படும் தருணத்தை விட அழகானது - பார்கிறேன்
அவள் முகம் இன்று

காமம் வெளியேறிய பின்பும்
என்னுள் காதல் இன்னும் மிச்சம் இருப்பதை உணர செய்கின்றேன்..
காதலில் அடுத்த பாடலுக்கான பல்லவி எழுத படுகின்றது

No comments:

Post a Comment